ADDED : ஜூலை 23, 2024 02:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் திருவோணம் நட்சத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கோவிலில் நேற்று காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண உற்சவம் இரவு 7:00 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.