/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
சுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : மார் 25, 2024 05:47 AM
புவனகிரி: கீரப்பாளையம் அருள்மிகு சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா மற்றும் வள்ளலார் விழா நேற்று நடந்தது.
கீரப்பாளையம் அருள்மிகு சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குவி உத்திரம் கொடியேற்றதுடன் துவங்கியது. நேற்று முன் தினம் இரவு 9.00 மணிக்கு வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை 5.00 மணிக்கு அகவல் பாராயணம், ஜோதி தரிசனம், காலை 7.00 மணிக்கு காவடி உற்சவம், மதியம் 1:30 மணிக்கு அபிேஷக ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.
மதியம் 2.00 மணிக்கு அன்னதானம், இரவு 9.30 மணிக்கு உற்சவ மூர்த்தி வீதியுலா காட்சி நடந்தது. ஏற்பாடுகளை விழா குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் குழுவினர்கள் செய்திருந்தனர்,

