/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவதிகை சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு
/
திருவதிகை சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு
திருவதிகை சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு
திருவதிகை சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்தில் அருள்பாலிப்பு
ADDED : ஜூலை 06, 2024 04:21 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அதனையொட்டி காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, 9:30 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடாகி உற்சவர் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.
தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தை முன்னிட்டு மகாபிரசாதமாக பலவகை மூலிகைகள் கொண்டு தயாரித்த அவுஷதம் லேகியம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.