/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நான் முதல்வன் திட்டத்தில் இன்று உயர் கல்வி தேர்வு முகாம்
/
நான் முதல்வன் திட்டத்தில் இன்று உயர் கல்வி தேர்வு முகாம்
நான் முதல்வன் திட்டத்தில் இன்று உயர் கல்வி தேர்வு முகாம்
நான் முதல்வன் திட்டத்தில் இன்று உயர் கல்வி தேர்வு முகாம்
ADDED : ஆக 19, 2024 11:38 PM
கடலுார்: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் எச்.சி.எல்., டெக் நிறுவனம் இணைந்து நடத்தும் டெக்பீ எனும் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி தேர்வு முகாம் இன்று நடக்கிறது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்திக்குறிப்பு:
முகாம் கடலுார் சி.கே.பள்ளி, அண்ணாமலை பல்கலைக்கழக நெட்ஒர்க் லேப், ஜெயப்பிரியா பள்ளி ஆகிய இடங்களில் இன்று 20ம் தேதி நடக்கிறது. இத்திட்டமானது மாணவர்கள் சிறு வயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை தொடங்க வாய்ப்பு அளிக்கிறது.
கடந்த 2023 அல்லது 2024ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு கலைபாடப் பிரிவில் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள மற்றும் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி வழங்கப்படுகிறது.
ஒரு ஆண்டுகால பயிற்சி முடிப்பவர்களுக்கு எச்.சி.எல்., நிரந்தர வேலைவாய்ப்பை வழங்குவதோடு, அவர்களின் மேற்படிப்பை தொடங்க வாய்ப்பை தருகிறது. பயிற்சியின் போது, மாதம் 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பணியில் சேர்ந்தவுடனே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு 1.70 லட்சம் ரூபாய் வரை கிடைக்க வழிவகை செய்கிறது.பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியைத் தொடங்கவும், கல்விக்கட்டணத்தில் ஒரு பகுதியை எச்.சி.எல் டெக் நிறுவனம் வழங்குகிறது.
இத்தேர்வு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://registrations.hcltechbee.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம். மேலும் பதிவு செய்வதற்கான வழிமுறைகளை https://youtu.be/yyAPZYtYP40 என்ற முகவரிலும் காணலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

