/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் முன்னேற்ற குழுவினருக்கு பயிற்சி
/
வேளாண் முன்னேற்ற குழுவினருக்கு பயிற்சி
ADDED : ஜூன் 28, 2024 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டியில் உழவர் நலத்துறை சார்பில், கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
வேளாண்மை இணை இயக்குனர் ஏழுமலை, வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விளக்கி, விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கினார். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி உதவி இயக்குனர் சுரேஷ், மான்ய திட்டங்கள், உழவன் செயலி பயன்பாடு குறித்து வேளாண் அலுவலர் விஜய் விளக்கினர்.
ஊராட்சி தலைவர் சங்கர், உதவி தொழில்நுட்ப மேலாளர் வீராசாமி, உதவி அலுவலர் கோபாலகிருஷ்ணன், உதவி மேலாளர் புனிதலட்சுமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.