/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆற்றில் மூழ்கி டிராவல்ஸ் உரிமையாளர் பலி
/
ஆற்றில் மூழ்கி டிராவல்ஸ் உரிமையாளர் பலி
ADDED : ஜூன் 15, 2024 06:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியகுப்பம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சாமி என்கிற சுப்ரமணியன,55; சாமி டிராவல்ஸ் உரிமையாளர்.இவர் நேற்று முன்தினம் மாலை 5.00 மணியளவில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை பிடித்து வர சென்றவர் வெள்ளாற்று தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்ரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.