/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாலி செயினை பறிக்க முயற்சி வாலிபருக்கு வலை
/
தாலி செயினை பறிக்க முயற்சி வாலிபருக்கு வலை
ADDED : ஆக 31, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயன்ற வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த கலர்குப்பம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மனைவி பிரியா, 21. இவர் நேற்று முன்தினம் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த இலுப்பையூர் காலனியைச் சேர்ந்த தேவா, 18, என்பவர் பிரியா கழுத்தில் கிடந்த தாலி செயினை பறிக்க முயன்றார்.
பிரியா கூச்சலிட்டதும் தேவா தப்பியோடினார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, தேவாவை தேடி வருகின்றனர்.