நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு,- நடுவீரப்பட்டு சப் இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கொடுக்கன்பாளையம் - மலையடிக்குப்பம் செல்லும் சாலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே மலையடிக்குப்பம் சிலம்பரசன், புஷ்பராஜ், கணேசமூர்த்தி, வெள்ளக்கரை காலனி திருமூர்த்தி, செல்வநாதன், வாண்டராசன்குப்பம் புகழ், பாலுார் பிரபு, பத்திரக்கோட்டை வசந்த் ஆகிய 8 பேரும் காசு வைத்து சூதாடினர்.
நடுவீரப்பட்டு போலீசார் சிலம்பரசன், 34; திருமூர்த்தி, 38; இருவரையும் கைது செய்தனர். தப்பியோடிய மற்ற 6 பேரை வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

