ADDED : ஆக 02, 2024 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பைக் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கார்குடல் காலனியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த இருவர், அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த பைக்கை திருட முயன்றனர். கிராம மக்கள் மடக்கிப் பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் அய்யாகண்ணு மகன் விஜய், 23, வதிஷ்டபுரம் மோகன் மகன் பாலகணபதி, 21, என்பது தெரிய வந்தது. இது குறித்து கார்குடல் மணிகண்டன் மகன் சிற்றரசன், 23, புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.