/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேணுகோபாலசாமி கோவில திருப்பணி துவங்க ஆலோசனை
/
வேணுகோபாலசாமி கோவில திருப்பணி துவங்க ஆலோசனை
ADDED : ஜூன் 22, 2024 04:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் வேணுகோபாலசாமி கோவில் திருப்பணிக்கு அறநிலையத்துறை 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சாமி கோவில் உள்ளது. இக்கோவில் மூலவர் சிலை அத்திமரத்தாலானது சிறப்பாகும். இக்கோவிலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அறநிலையத்துறை சார்பில் 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதை தொடர்ந்து திருப்பணி வரும் ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.