/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடம் குறுவட்டத்தை பிரிக்க கிராம மக்கள் கோரிக்கை
/
பெண்ணாடம் குறுவட்டத்தை பிரிக்க கிராம மக்கள் கோரிக்கை
பெண்ணாடம் குறுவட்டத்தை பிரிக்க கிராம மக்கள் கோரிக்கை
பெண்ணாடம் குறுவட்டத்தை பிரிக்க கிராம மக்கள் கோரிக்கை
ADDED : மே 22, 2024 12:42 AM
பெண்ணாடம் : பெண்ணாடம் வருவாய் குறுவட்டத்தை இரண்டாக பிரித்து, கூடுதல் வருவாய் ஆய்வாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி தாலுகாவில் திட்டக்குடி கிழக்கு, மேற்கு, தொழுதூர், பெண்ணாடம் ஆகிய நான்கு குறுவட்டங்கள் உள்ளன. அதில், திட்டக்குடி கிழக்கு குறுவட்டத்தில் 25; மேற்கு குறுவட்டத்தில் 19; தொழுதூர் குறுவட்டத்தில் 21; பெண்ணாடம் குறுவட்டத்தில் 44 என, மொத்தம் 109 வருவாய் கிராமங்கள் உள்ளன.
இதில், பெண்ணாடம் மற்ற குறுவட்டத்தை விட இரண்டு மடங்கு வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. இதற்கு ஒரு வருவாய் ஆய்வாளர் மட்டுமே உள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு, விவசாயம் சார்ந்த கணக்கெடுப்பு, வருவாய் கிராமங்களில் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள், கலவரங்கள் உள்ளிட்ட அவசர காலங்களில் ஏற்படும் பிரச்னைகளை நிர்வகிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படுகிறது.
இதுபோன்ற நிர்வாக காரணங்களுக்காக பெண்ணாடம் குறுவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
பெண்ணாடம் குறுவட்டத்தில் ஏற்படும் பிரச்னைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க முடியாத நிலையும் தொடர்கிறது.
எனவே, பெண்ணாடம் குறுவட்டத்தை இரண்டாக பிரித்து, கூடுதல் வருவாய் ஆய்வாளரை நியமிக்க மாவட்ட அமைச்சர்கள், கலெக்டர் ஆகியோர் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

