ADDED : ஆக 18, 2024 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுாரில் இறகுபந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கடலுாரில் ஆபீசர்ஸ் கிளப் சார்பில் இறகுபந்து விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. தி.மு.க., மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் கலைக்கோவன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கினார்.
அரசு வழக்கறிஞர் பிரியதர்ஷனா, டி.எஸ்.பி., சண்முகவேலன், வழக்கறிஞர்கள் சத்தியராஜ், ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். லுாயிஸ் வரவேற்றார். ராஜசேகர், முகமது அலி, பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.

