ADDED : மார் 07, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : வடலுார் அருகே குடும்ப பிரச்னையில், அரளிவிதை தின்று, பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வடலுார் அடுத்த தென்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி மனைவி ஜெயமாலா,63. கடந்த 3ம் தேதி, குடும்ப பிரச்னை காரணமாக மனமுடைந்த இவர், அரளி விதையை சாப்பிட்டார். அருகிலிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு ஜெயமாலா இறந்தார்.
புகாரின்பேரில் வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.