ADDED : ஜூலை 25, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பக்கிரி,65 விவசாய கூலி தொழிலாளி.
இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே கடலூர் பண்ருட்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த டிராக்டர் பக்கிரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பக்கிரி கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.