ADDED : ஏப் 23, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரியில், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், காய கல்ப பயிற்சி மற்றும் யோகா பயிற்சி வகுப்பு நடந்தது.
புவனகிரி பஸ் நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் மணவளக்கலை மன்ற சிவக்குமார் தலைமை தாங்கினார்.
தமிழ்ச்செல்வம் வரவேற்றார். ராதிகாலட்சுமி, பராசக்தி கடவுள் வாழ்த்து பாடினர். நெய்வேலி அறிவு திருக்கோயில் பயிற்சியாளர் ஏழுமலை பயிற்சி அளித்தார். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ரகுபதி நன்றி கூறினார்.

