ADDED : மார் 08, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே பஸ்சில் சிக்கி இறந்த வாலிபர், கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் அடுத்த வழிசோதனைப்பாளையத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன், 36; இவர், நேற்றிரவு 10:30 மணிக்கு கண்ணாரப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் நண்பர்கள் 4 பேருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, குறிஞ்சிப்பாடியில் இருந்து கடலுார் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த கடலுார் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் பஸ்சில் தள்ளி விடப்பட்டு பத்மநாபன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.