நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தேவாங்கர் சமூகம் சார்பில் யுகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது.
யுகாதி பண்டிகையொட்டி, கோவிலில் நேற்று காலை 9.00 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வினாயகர்,முருகன், அம்பாள் உள்ளிட்ட விக்ரகங்களுக்கு முத்தங்கி சாத்தி வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஒருவருக்கொருவர் யுகாதி வாழ்த்து பகிர்ந்து கொண்டனர்.

