sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

108 கோ பூஜை விழா

/

108 கோ பூஜை விழா

108 கோ பூஜை விழா

108 கோ பூஜை விழா


ADDED : மார் 22, 2025 07:21 AM

Google News

ADDED : மார் 22, 2025 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் ஸ்ரீபெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், 11ம் ஆண்டு கோ பூஜை விழா நடந்தது.

காலையில் மூலவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. உலக நன்மை வேண்டி, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க மகா யாகம் செய்து, புனிதநீர், சந்தனம், பால், பன்னீர் போன்ற திரவியங்களல் சிறப்பு அபிேஷகம் நடந்தது.

பின், பசுக்களுக்கு வஸ்திரங்கள் சாற்றி, அன்னம் வழங்கப்பட்டது. துாத்துக்குடி, ஆழ்வார் திருநகரி (ஸ்ரீநம்மாழ்வார் அவதார ஸ்தலம்), 41வது பட்டம், ஸ்ரீமான் ரங்க ராமானுஜ ஜீயர் சுவாமிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கோ பூஜையை துவக்கி வைத்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

தொடர்ந்து, 108 பசுக்களுக்கு வெள்ளம் கலந்த அரிசி, பழங்கள், கீரைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு லட்டு உள்ளிட்ட பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us