ADDED : பிப் 06, 2025 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி எல்.என்.புரம் பிரசன்னமாரியம்மன் கோவிலில் உலக நன்மை பெற வேண்டி, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம்., ஊராட்சி, வ.உசி., நகர் பிரசன்னமாரியம்மன் கோவிலில் உலக நன்மை பெற வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் விஷ்ணு துர்கா மகளிர் மன்றத்தினர் 108 பேர் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். அனைவருக்கும் சுமங்கலி பூஜை பொருட்கள் வழங்கினர்.

