/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாயமான 15 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
/
மாயமான 15 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
ADDED : ஏப் 02, 2025 05:45 AM

பண்ருட்டி : பண்ருட்டியில் காணாமல் போன 15 பேரின் மொபைல் போன்களை மீட்டு டி.எஸ்.பி.ராஜா உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
பண்ருட்டி அடுத் சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்தேவநாதன்,60; பண்ருட்டி மகாலிங்கம்,46; எபினேஷ்,27; அம்சவல்லி,30; நெய்வேலி சாந்தகுமார்,54; சீர்காழி முருகன்,31; திருவதிகை செல்வகுமார்,42; உள்ளிட்ட 15 பேரின் மொபைல் போன்கள் அடுத்தடுத்து காணாமல் போனது. இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
டி.எஸ்.பி.ராஜா தலைமையில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி, தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்களை சி.இ.ஐ.ஆர்.சாப்ட்வேர் மூலம் கண்டுபிடித்து மீட்டனர். கண்டுபிடிக்கப்பட்ட மொபைல் போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

