ADDED : மே 03, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மதுபாட்டில்கள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, காந்தி தலைமையிலான போலீசார் ஆலடி ரோடு, பாலக்கரை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன், 26; ராஜேந்திரபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி, 40, ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, 74 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.