ADDED : பிப் 16, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : பெட்டிக் கடையில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த காவனுார் பகுதியில் எஸ்.பி., தனிப்படை போலீசார் நேற்று காவனுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல், 43; ஜானகி, 53, ஆகியோர் தங்களின் பெட்டிக் கடையில் குட்கா விற்றது தெரிந்தது. உடன், இருவரையும் கருவேப்பிலங்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

