ADDED : ஜூலை 14, 2025 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் ஸ்ரீகாந்த்,21; அதே பகுதியை சேர்ந்த மணிபாலன் மகன் சுடர்மணி,20; இருவருக்கும் முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் விலங்கல்பட்டு வீரன் கோவில் அருகே வந்த ஸ்ரீகாந்த்தை, சுடர்மணி மற்றும் அவரது தரப்பினர் வழிமறித்து தாக்கினர்.
அதனைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஆதரவாளர்கள், சுடர்மணி தரப்பினரை தாக்கினர். இந்த மோதலில் காயமடைந்த ஸ்ரீகாந்த், சுடர்மணி கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், 14 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இதில், ராமதாஸ், 42; சந்திரசேகர், 45; ஆகியோரை கைது செய்தனர்.