/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர்களை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
/
மாணவர்களை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
ADDED : பிப் 07, 2026 03:58 AM
கடலுார்: கடலுார் அருகே பஸ்சில் ஏற்பட்ட தகராறில் பாலிடெக்னிக் மாணவர்களை தாக்கிய, 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மணமேடு பகுதியைச் சேர்ந்தவர் அரிதாஸ்,45; இவரது மகன் சுனில் மற்றும் அவரது நண்பர்கள் நிவேதன், பீமாராவ் ஆகியோர் கடலுாரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கின்றனர்.
நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, வீட்டிற்கு செல்வதற்காக புதுச்சேரியிலிருந்து கரையாம்புத்துார் செல்லும் தனியார் பஸ்சில் ஏறினர்.
அப்போது படியில் நின்றிருந்த உள்ளேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த அபிமன்னன் மகன் அஜய்,21; குப்புசாமி மகன் ஷர்மா,19; ஆகியோரிடம் உள்ளே செல்ல வழிவிடக் கேட்டனர்.
இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சுனில், நிவேதன், பீமாராவ் ஆகிய மூன்று பேரும் காயமடைந்தனர்.
புகாரின் பேரில் துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து அஜய், ஷர்மா ஆகியோரைக் கைது செய்தனர்.

