/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
25 சவரன் நகை கொள்ளை பண்ருட்டி அருகே துணிகரம்
/
25 சவரன் நகை கொள்ளை பண்ருட்டி அருகே துணிகரம்
ADDED : பிப் 07, 2025 02:42 AM
பண்ருட்டி:பண்ருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து, 25 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எல்.என்.புரத்தை சேர்ந்தவர் கணேசன் மனைவி அருந்ததி, 60; இவரது இரு மகன்கள் வெளிநாட்டில் இன்ஜினியர்களாக பணிபுரிகின்றனர். கணவர் இறந்த நிலையில், அருந்ததி தன் மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் வசிக்கிறார்.
அருந்ததி தன் குடும்பத்துடன் பிப்.2ம் தேதி மந்திராலயம் கோயிலுக்கு சென்றார். நேற்று முன்தினம் வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அருகில் வசிப்பவர்கள், அருந்ததிக்கு தகவல் தெரிவித்தனர்.
பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தியதில், பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள், 65,000 ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.