தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணல் திருட்டு 3 பேர் கைது

மணல் திருட்டு 3 பேர் கைது

மணல் திருட்டு 3 பேர் கைது


ADDED : நவ 29, 2024 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் மணல் திருட்டு வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவந்திபுரம் அருகே கெடிலம் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிவந்த டி.புதுாரைச் சேர்ந்த கட்டையன் என்கிற லட்சகுரு, 47, என்பவரை கைது செய்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். அதேபோல் கே.என்.பேட்டை பஸ்நிறுத்தம் அருகே மினிலாரியில் மணல் கடத்திச்சென்ற பண்ருட்டி அடுத்த பாலுாரைச் சேர்ந்த கிருஷ்ணராஜ்,32, எம்.புதுாரை சேர்ந்த அப்பு,25, ஆகியோரை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர். திருப்பாதிரிப்புலியூர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us