ADDED : ஜன 16, 2026 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: ரெட்டிச்சாவடி அருகே கஞ்சா பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த ரெட்டிச்சாவடி சப் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கடை புதிய பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில், புதுக்கடையைச் சேர்ந்த ரோகித்,18; சிவசங்கரன் மகன் சக்திவேல்,18; புதுச்சேரி, முருங்கபாக்கம் ஆனந்தவேல் மகன் மனோஜ்குமார்,23; என்பதும், கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ரோகித் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

