தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 3 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

3 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

3 குடிசை வீடுகள் எரிந்து சேதம்


ADDED : ஜூன் 06, 2025 08:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2025 08:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்; சிதம்பரம் அருகே 3 குடிசை வீடுகள் அடுத்தடுத்து எரிந்து சேதமானது.

சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி, மீதிகுடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சரிதா, சுரேஷ், அமுதா. இவர்கள் நேற்று வழக்கம் போல் 100 நாள் வேலைக்கு சென்றனர். சிறிது நேரத்தில் மூவரின் வீடு மர்மமான முறையில் அடுத்தடுத்து எரியத் துவங்கியது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.

தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us