/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் பகுதியில் 3 நாட்கள் மின் நிறுத்தம்
/
விருத்தாசலம் பகுதியில் 3 நாட்கள் மின் நிறுத்தம்
ADDED : பிப் 09, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
விருத்தாசலம் மின்துறை செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
விருத்தாசலம் வழியாக அரியலுார் மாவட்டம் ஈச்சங்காடு செல்லும் 230 கே.வி., டவர் லைன் பணிகள் நெடுஞ்சாலை துறை மூலம் நடக்கிறது.
இதன் காரணமாக, புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம், சாத்தமங்கலம், ஆர்.ஆர்.ஸ்டேஷன் ஆகிய பகுதிகளில், வரும் 9, 10 ஆகிய தேதிகளில் காலை 9:00 மணி முதல் பகல் 1:00 மணி வரையிலும், 11ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

