ADDED : ஜூன் 27, 2025 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அருகே நிலத்தில் மேய்ந்த மெகா சைஸ் நட்டுவாக்காலியை வனத்துறையினர் மீட்டு பிச்சாவரம் காப்புக் காட்டில் விட்டனர்.
சிதம்பரம் அடுத்த ஒரத்துாரைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இயற்கை வாழ்வியல் மருத்துவரான, இவர் தனது வீட்டின் அருகில் உள்ள சொந்தமான வயலில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது கடும் விஷம் கொண்ட, பெரிய அளவிலான 3 நட்டுவாக்காலி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடன், அவர் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், வனவர் அன்பரசன் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, நட்டுவாக்காலியை மீட்டு பிச்சாவரம் காப்புக் காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.