தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காசு வைத்து சூதாடிய 3 பேர் கைது

காசு வைத்து சூதாடிய 3 பேர் கைது

காசு வைத்து சூதாடிய 3 பேர் கைது


UPDATED : ஜூலை 23, 2026 09:18 PM

ADDED : ஜூலை 23, 2026 08:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 09:18 PM ADDED : ஜூலை 23, 2026 08:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே காசு சூதாடிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, 3 பேரை கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் விஜயமாநகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, நடுகாட்டு அம்மன் கோவில் பகுதியில் உள்ள முந்திரி தோப்பில், விருத்தாசலம் நாச்சியார்பேட்டையை சேர்ந்த ஜெயராமன் மகன் வெங்கடாஜலபதி; விஜயமாநகரம் புது இளவரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல்; பண்ருட்டி அங்குசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ராம்குமார், 56; உளுந்துார்பேட்டையை சேர்ந்த சபியுல்லா, 46; நாச்சியார்பேட்டையைச் சேர்ந்த மாதேஷ்குமார், 25; பாலா, ஆகியோர் பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீசார், வெங்கடாஜலபதி, சக்திவேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிந்து, ராம்குமார், சபியுல்லா, மாதேஷ்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us