ADDED : செப் 25, 2024 03:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி பகுதியில் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் எழில்தாசன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகப்படும்படி பைக்கில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் தட்டாம்பாளையத்தை சேர்ந்த காத்தமுத்து மகன் புஷ்பராஜ், 22; முருகன் மகன் விக்கி, 21; லட்சுமணன் மகன் ராகுல்,23; எனவும். மூவரும் ஒரு கிலோ கஞ்சா கொண்டு வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர். கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.