தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர் பணியிட மாற்றம்
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர் பணியிட மாற்றம்
ADDED : ஆக 11, 2025 10:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளதாவது:
சென்னை ஊர்க்காவல் படை ஐஜி ஆக இருந்த ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக நியமனம்.
திருச்சி டிஐஜி வருண்குமார் சென்னை சிபிசிஐடிக்கு மாறறம்
டான்ஜெட்கோ தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக இருந்த டிஜிபி பிரமோத்குமார், சென்னை ஊர்க்காவல்படை டிஜிபி ஆக நியமனம்.
சென்னை, குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆக இருந்த ஆயுஷ் மணி திவாரி, டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு துறை தலைமை விழிப்புணர்வு அதிகாரி ( ஏடிஜிபி) ஆக நியமனம்.