sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குறைகேட்பு கூட்டத்தில் 503 மனுக்கள் குவிந்தன

/

குறைகேட்பு கூட்டத்தில் 503 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டத்தில் 503 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டத்தில் 503 மனுக்கள் குவிந்தன


ADDED : ஜன 21, 2025 06:49 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு 80 ஆயிரம் மதிப்பில் மொபைல் போன்களை கலெக்டர் வழங்கினார்.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 503 மனுக்கள் பெறப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட 5 மாறுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா 16,000 ரூபாய் வீதம் மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மொபைல் போன்களை கலெக்டர் வழங்கினார்.

டி.ஆர்.ஓ., ராஜசேகரன், முத்திரைத்தாள் துணை கலெக்டர் தனலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜீ, கலால் உதவி ஆணையர் சந்திரகுமார், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us