/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு தண்ணீர் வெளியேறி வீணாகியது
/
கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு தண்ணீர் வெளியேறி வீணாகியது
கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு தண்ணீர் வெளியேறி வீணாகியது
கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு தண்ணீர் வெளியேறி வீணாகியது
ADDED : அக் 12, 2025 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன் கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.
என்.எல்.சி., இரண்டாம் சுரங்க பகுதியிலிருந்து ராட்சத இரும்பு குழாய் மூலம் பெண்ணாடம், மங்கலம்பேட்டை, திட்டக்குடி நல்லுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிப்போர் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மந்தாரக்குப்பம் இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் பகுதியில் உள்ள ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது. இதனால், பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.