/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழிலாளி மர்ம சாவு போலீஸ் விசாரணை
/
தொழிலாளி மர்ம சாவு போலீஸ் விசாரணை
ADDED : அக் 12, 2025 05:20 AM
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே வாழைத்தோப்பில், மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாய கூலித் தொழிலாளி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி பி.டி.எஸ்., மணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி, 45; இவரது மனைவி செல்வி, 37; இவர்களுக்கு 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
கடந்த, 8 மாதங்களாக வீரமணி, குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை 6:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள வாழைத் தோப்பில் வீரமணி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.