/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சரக்கு வாகனத்தில் ஆபத்தான 'சவாரி'
/
சரக்கு வாகனத்தில் ஆபத்தான 'சவாரி'
ADDED : டிச 25, 2024 08:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் மினி சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லவே கூடாது. ஆனால், இந்த வாகனங்களில் தற்போது அதிகளவில் ஆட்களை மட்டுமே ஏற்றிச் செல்கின்றனர்.
இதனால், விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து காணப் படுகின்றது.
கடலுார் மாவட்டத்திலும் இந்த நிலை நீடித்து வருகிறது. இதை போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை.
எனவே, மினி சரக்கு வாகனங்கள் சவாரி ஏற்றி செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.