/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக் மோதி சிறுமி சாவு நடுவீரப்பட்டில் பரிதாபம்
/
பைக் மோதி சிறுமி சாவு நடுவீரப்பட்டில் பரிதாபம்
ADDED : செப் 23, 2024 07:36 AM
நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரையை சேர்ந்தவர் அர்ஜூன்.
இவரது மகள் ரக்ஷிதா, 8; இவர், கடந்த 9ம் தேதி நடுவீரப்பட்டு-வெள்ளக்கரை சாலையில், தனது வீட்டு அருகே நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் ரக்ஷிதா மற்றும் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம், 52; ஆகியோர் மீது மோதி விட்டு வேகமாக சென்றுவிட்டது.
பலத்த காயமடைந்த ரக் ஷிதா, பரமசிவம் இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், ரக்ஷிதா மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிறுமி நேற்று இறந்தார். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய நபரை தேடி வருகின்றனர்.