/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமிக்கு தொந்தரவு: முதியவருக்கு குண்டாஸ்
/
சிறுமிக்கு தொந்தரவு: முதியவருக்கு குண்டாஸ்
ADDED : ஏப் 30, 2025 07:41 AM

கடலுார்; சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி, கண்ணன் குளத்தைச் சேர்ந்தவர் முருகேசன்,58; இவர், கடந்த 14ம் தேதி கடலுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த போது, 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில், அவரை கைது செய்தனர்.
இவரின் குற்றச் செயலை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரைப்படி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முருகேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, கடலுார் மத்திய சிறையில் உள்ள முருகேசனிடம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கி கைது செய்தனர்.