sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தானாக ஓடிய அரசு பஸ் பூக்கடையில் மோதியதால் பரபரப்பு

/

தானாக ஓடிய அரசு பஸ் பூக்கடையில் மோதியதால் பரபரப்பு

தானாக ஓடிய அரசு பஸ் பூக்கடையில் மோதியதால் பரபரப்பு

தானாக ஓடிய அரசு பஸ் பூக்கடையில் மோதியதால் பரபரப்பு


ADDED : அக் 25, 2024 06:54 AM

Google News

ADDED : அக் 25, 2024 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் அரசு டவுன் பஸ் தானாக ஓடிச்சென்று, எதிரே இருந்த காம்ளக்சில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலுார் முதுநகரில் இருந்து, பரங்கிப்பேட்டைக்கு நேற்று மாலை பயணிகளுடன் அரசு டவுன் பஸ் வந்தது. பஸ்சை டிரைவர் சபாபதி என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சை, பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர் கோவில் தெரு பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, அரசு மருத்துவமனை முன், டிரைவர் நிறுத்தினார். அருகில் உள்ள கடைக்கு டீ குடிப்பதற்காக, டிரைவர் மற்றும் கண்டக்டர் சென்றனர்.

சற்று நேரத்தில் கியரில் நிறுத்திருந்த பஸ், திடீரென தானாக ஓடி எதிரே இருந்த காம்ளக்சில் இருந்த பூக்கடை மீது மோதி நின்றது. பஸ், தானாக வருவதை பார்த்ததும், அப்பகுதியில் நின்றிருந்தவர்கள், அலறியடித்து ஓடினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

பஸ்சின் முன் பக்க கண்ணாடியும், பூக்கடை முழுவதும் சேதமடைந்தது.

இதுகுறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் பரங்கிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us