/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டேங்கர் லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி
/
டேங்கர் லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி
ADDED : அக் 19, 2024 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே பைக்கி சென்றவர் லாரி மோதி இறந்தார்.
நெல்லிக்குப்பம் வாழப்பட்டை சேர்ந்த ஜோதிமணி, 45; டிரைவர். இவர் நேற்று காலை தனது பைக்கில் பண்ருட்டி நோக்கி சென்றார். வாழப்பட்டு அருகே சென்றபோது எதிரே சென்னையில் இருந்து கடலூருக்கு பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஜோதிமணி பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ஜோதிமணி இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த ஜோதிமணிக்கு மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர்.