sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தப்பியோட முயன்ற ரவுடிக்கு 'மாவுக்கட்டு'

/

தப்பியோட முயன்ற ரவுடிக்கு 'மாவுக்கட்டு'

தப்பியோட முயன்ற ரவுடிக்கு 'மாவுக்கட்டு'

தப்பியோட முயன்ற ரவுடிக்கு 'மாவுக்கட்டு'


ADDED : மார் 28, 2025 05:36 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி; கொலை மிரட்டல் வழக்கில் தப்பியோட முயன்ற ரவுடி கீழே விழுந்ததில் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

நெய்வேலியில் நடந்து சென்ற இளைஞரை கத்தியால் தாக்கிய ரவுடியை டவுன்ஷிப் போலீசார் கைது செய்ய முற்பட்டபோது தப்பியோடியதால் வழுக்கி விழுந்த ரவுடிக்கு மாவுகட்டு போட்ட போலீசார் அவருக்கு சிகிச்சை அளித்து கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த சொரத்துாரை சேர்ந்த ராமர் மகன் கோபிநாத். 25; இவர், கடந்த 24ம் தேதி, அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

செடுத்தான்குப்பம் முருகவேல் மகன் ராக் ( எ) ராஜ்குமார்,27; கோபிநாத்தை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார், டவுன்ஷிப் வட்டம் 5ல் உள்ள மயானம் அருகே பதுங்கியிருந்த ராஜ்குமாரை நேற்று சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.

அப்போது தப்பியோட முயன்ற ராஜ்குமார் கீழே விழுந்ததில் இடது கால் மற்றும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சை முடிந்து சிறையில் அடைக்கபட்டார்.

ராஜ்குமார் மீது ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. கொலை முயற்சி, ஆயுதம் வைத்திருத்தல், வழிப்பறி என 10 வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us