ADDED : ஜன 06, 2025 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை திலகவதியார் திருநாவுக்கரசர், திருத்தொண்டர்கள் குழு சார்பில் உலக நன்மை பெற வேண்டி 14 ம் ஆண்டு ஆன்மிக நடைபயணம் நேற்று நடந்தது.
வீரட்டானேஸ்வரர் கோவில் துவங்கி, கடலுார் சாலை, பஸ் நிலையம், நான்குமுனை சந்திப்பு, காந்தி ரோடு வழியாக புதுப்பேட்டை அடுத்த கோட்லாம்பாக்கம் சித்தவடமடம் சென்று அங்கு சுவாமியை வழிபட்டனர்.
இதில் திருதொண்டர்கள் குழு ஆறுமுகம், ஓதுவாமூர்த்தி ராஜ்குமார் உள்ளிட்ட சிவனடியார்கள், ஆன்மிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

