sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கூடுதல் படகுகள்... தேவை; சுற்றுலா பயணிகள் மணிக்கணக்கில் காத்திருப்பு

/

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கூடுதல் படகுகள்... தேவை; சுற்றுலா பயணிகள் மணிக்கணக்கில் காத்திருப்பு

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கூடுதல் படகுகள்... தேவை; சுற்றுலா பயணிகள் மணிக்கணக்கில் காத்திருப்பு

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கூடுதல் படகுகள்... தேவை; சுற்றுலா பயணிகள் மணிக்கணக்கில் காத்திருப்பு


ADDED : பிப் 20, 2024 03:00 AM

Google News

ADDED : பிப் 20, 2024 03:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், போதுமான படகுகள் இல்லாததால், மணிக்கணக்கில் காத்திருந்து படகு சவாரி செய்ய வேண்டியுள்ளதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் உலக புகழ்பெற்ற வன சுற்றுலா மையம் உள்ளது. இங்கு, மாங்குரோவ்ஸ் எனும் சுரபுண்ணை தாவரங்கள் மற்றும் பல்வேறு மூலிகை தாவரங்கள் நிறைந்துள்ளன.

இதனால், தமிழக பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு, குடும்பத்துடன் படகுகளில் வனக்காடுகளை சுற்றி பார்த்து மகிழ்கின்றனர்.

பிச்சாவரத்திற்கு, சாதாரண நாட்களை விட, பண்டிகை காலங்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்து விடுகின்றனர்.

வனக்காடுகளை சுற்றிபார்க்க வசதியாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், 15 மோட்டார் படகுகள் மற்றும் 38 துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், சுற்றுலா பயணிகள் வருகைக்கு ஏற்ப அவைகள் போதுமானதாக இல்லை.

இதனால், மணிக்கணக்கில் காத்திருந்து, படகு சவாரி செய்ய வேண்டிய நிலையில், சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். 1 மணி நேரத்தில் வனக்காடுகளை சுற்றிபார்க்க வேண்டிய சுற்றுலா பயணிகள், ஒரு நாள் முழுவதும் நேரத்தை வீணடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக, முதியவர்கள் மற்றும் கைக்குழந்தையுடன் வருவோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

கோடை விடுமுறையில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அந்த வகையில், கோடை துவங்க உள்ளதால் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் போதுமான அளவு மோட்டார் படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் இயக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஏ.டி.எம், வசதி அவசியம்

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கியம் வாய்ந்த இங்கு, ஏ.டி.எம்., வசதி இல்லை. இதனால் வெளியூர் சுற்றுலா பயணிகள் அவசர தேவைக்கு கிள்ளை, சிதம்பரம், பரங்கிப்பேட்டைக்கு சென்று பணம் எடுத்துவரும் நிலை உள்ளது. அதனால், சுற்றுலா பயணிகளின் நலன்கருதி இங்கு அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்தி தரவும், சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us