sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் அரசு இசைப் பள்ளியில்  மாணவர்கள் சேர்க்கை துவக்கம் 

/

கடலுார் அரசு இசைப் பள்ளியில்  மாணவர்கள் சேர்க்கை துவக்கம் 

கடலுார் அரசு இசைப் பள்ளியில்  மாணவர்கள் சேர்க்கை துவக்கம் 

கடலுார் அரசு இசைப் பள்ளியில்  மாணவர்கள் சேர்க்கை துவக்கம் 


ADDED : ஜூன் 04, 2025 08:53 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 08:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் அரசு இசைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கடலுார் பழைய கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் வாய்ப்பாட்டு குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது.

மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி, காலை 10.00 முதல் மாலை 4.00 வரை என முழுநேர வகுப்புகளாக நடக்கிறது. இசைப் பள்ளியில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் இசைப் பள்ளிக்கு நேரிடையாக வந்து விண்ணப்பம் பெறலாம்.

பயிற்சி கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 350 மட்டுமே பெறப்படுகிறது. சேர்க்கை வயது வரம்பு 13 வயது முதல் 25 வயது இருத்தல் வேண்டும். குரலிசை, மிருதங்கம், வயலின், பரதநாட்டியம் ஆகிய பயிற்சிக்கு ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய பயிற்சிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.400, இலவச பேருந்து பயண அட்டை, தங்கும் விடுதி, சலுகைக் கட்டணத்தில் ரயில் பயண வசதி வழங்கப்படுகிறது.

இசைப் பள்ளியில் பயின்றவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04142-232021, 9488002938, 9345417471 ஆகிய எண்களில் தெரிந்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us