/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்..
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்..
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்..
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்..
ADDED : மார் 05, 2024 05:57 AM

கடலுார்: தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தவறியதாக, தி.மு.க., அரசை கண்டித்து கடலுார் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வடக்கு மாவட்ட செயலாளரான, முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் தாமோதரன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மீனவரணி தங்கமணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தனர்.
அவைத்தலைவர் குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன் வரவேற்றனர். மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், அருண்மொழிதேவன், பாண்டியன், அமைப்பு செயலாளர் முருகுமாறன் கண்டன உரையாற்றினர்.
இதில், போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சுப்ரமணியன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், ஜெ., பேரவை துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், பாலமுருகன், பக்தரட்சகன், பகுதி செயலாளர்கள் மாதவன், பாலகிருஷ்ணன், வெங்கட்ராமன், கந்தன், தொழிற்சங்க பாலகிருஷ்ணன், வர்த்தக பிரிவு வரதராஜன், மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

