/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
/
வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 30, 2024 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் இறுதியாண்டு மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் இறுதியாண்டு மாணவிகள், பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் பகுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
குழு தலைவி சவுமியா, துணை தலைவி வர்ஷினி மற்றும் மாணவிகள், கிராம மக்கள் பங்கேற்றனர்.