/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
அ.தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 16, 2026 07:06 AM

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவிலில், ஒன்றிய அலுவலகம் எதிரில் தே.ஜ., கூட்டணி சார்பில் தி.மு.க., அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ, முருகுமாறன் தலைமை தாங்கி பேசினார். ஒன்றிய செயலாளர்கள் வாசு முருகையன், சிவகுமார் முன்னிலை வகித்தனர்.
த.மா.க.,முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயச்சந்திரன், ஜெ., பேரவை துணை செயலாளர் பாலமுருகன், பா.ஜ., சட்டசபை அமைப்பாளர் சரவணகுமார், தொகுதி இணை அமைப்பாளர் சீனு சங்கர், மண்டல் தலைவர் செந்தில்குமார், பா.ம.க., ஒன்றிய செயலாளர் கலைக்குமார், நகர செயலாளர்கள் செல்வம், சரவணன், நிர்வாகிகள் ராஜேஷ், ராஜவேல், அ.ம.மு.க.,ஒன்றிய செயலாளர் சசிகுமார், நகர செயலாளர் முத்துப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் கார்த்திக்கேயன் நன்றி கூறினார்.

