/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஏப் 05, 2025 05:29 AM

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டையில் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த் முன்னிலை வகித்தனர். பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், செல்வி ராமஜெயம் ஆகியோர் பூத் கமிட்டி நிர்வாகிகளின் பணிகள் மற்றும் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில், நகர அவைத் தலைவர் மலைமோகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், பேரூராட்சி கவுன்சிலர் ஜெயந்தி ஜெய்சங்கர், நகர துணை செயலாளர் இக்பால், ஜெ., பேரவை சுந்தர் ராமஜெயம், நிர்வாகிகள் கலைவாணன், மாரியப்பன், தனக்கோடி உட்பட பலர் பங்கேற்றனர்.