/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
ADDED : டிச 26, 2025 06:44 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கொத்தட்டை கிராமத்தில் நடந்தது.
மேற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அவை தலைவர் குமார், மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த் முன்னிலை வைத்தனர். பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் வரவேற்றார்.
கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிதம்பரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க, வேட்பாளரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் சுதாகர், ஒன்றிய பொருளாளர் பாஸ்கர், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் மாரிமுத்து, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராம் மகேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவி, நிர்வாகிகள் சங்கர், கோதண்டராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கிளை செயலாளர் சிவராஜ் நன்றி கூறினார்.

